Friday, November 18, 2016

என்ன சொல்லிப் பாடுவேன்?

என்ன சொல்லிப் பாடுவேன்?

கனகதாசருக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘முண்டிக தாசரு (Mundige)'. இவரது பாடல்களை சாதாரணமாகப் படித்தால் ஒரு பொருளும், சொற்களில் இருக்கும் குறியீடுகளைப் பிரித்துப் படித்தால் பல்வேறு அர்த்தங்களும் தெரியும். அதற்கே இவருக்கு அப்படி பெயர்.

இன்றைய பாடல் அப்படியில்லாமல், நேரடியாக, எளிமையாக பொருள் கொள்ளக்கூடிய பாடல். தன்னை தாழ்த்திக் கொண்டு, இறைவனின் பல்வேறு குணங்களை பாடும் பாடல்.

***

ஏனெந்து கொண்டாடி ஸ்துதிசலோ தேவா
நானேனு பல்லே நிம்ம மகிமே மாதவா (ஏனெந்து)

என்னவென்று சொல்லி உன்னைப் பாடுவேன் தேவா
எனக்கென்ன தெரியும் உன் மகிமையைப் பற்றி மாதவா (ஏனெந்து)

ஹரி முகுந்தனு நீனு நரஜன்ம ஹுளு நானு
பரமாத்மா நீனு பாமரனு நானு
கருடகமனனு நீனு மருளு பாபியு நானு
பரஞ்சோதி நீனு திருகனு நானு (ஏனெந்து)

ஹரி & முகுந்தன் நீ; மனித ஜென்மம் எடுத்து (சம்சாரத்தில் மூழ்கி) புழுவாய் இருப்பவன் நான்
அனைவருக்கும் கடவுள் நீ; எதுவுமே தெரியாதவன் நான்
கருட வாகனத்தில் பறப்பவன் நீ; பாவம் மட்டுமே செய்பவன் நான்
ஒளி ரூபமாய் இருப்பவன் நீ; சும்மா சுற்றித் திரிபவன் நான் (ஏனெந்து)

வாரிதிசயனனாத காருண்யபதி நீனு
கோரதிந்திஹ காமி க்ரோதி நானு
ஈரேளு புவனதொளு இருவ மூர்த்தி நீனு
தூரி நின்னனு பய்யுவ துஷ்ட நானு (ஏனெந்து)

பாற்கடலில் படுத்திருக்கும், மிக்க கருணை மிக்கவன் நீ
காமம் குரோதம் இவற்றில் மூழ்கியிருப்பவன் நான்
ஈரேழு உலகத்திலும் இருப்பவன் நீ
எப்பொழுதும் உன்னைத் திட்டிக் கொண்டே இருப்பவன் நான் (ஏனெந்து)

அணுரேணு த்ருணகளல்லி பரிபூர்ண நீனு
க்‌ஷண க்‌ஷணக்கே அணுகுணத கர்மி நீனு
வாணியரசன பெத்த வைகுண்டபதி நீனு
தனு நித்யவல்லத கொம்பே நானு (ஏனெந்து)

ஒவ்வொரு அணு, துகள்களிலும் பரிபூர்ணனாக இருப்பவன் நீ
ஒவ்வொரு நொடியிலும் குணங்களை மாற்றுபவன் நான்
சரஸ்வதியின் கணவரான பிரம்மனின் தந்தை, வைகுண்டத்தில் வசிப்பவன் நீ
நிலையில்லாத இந்த சரீரத்தைக் கொண்டவன் நான் (ஏனெந்து)

கம்பதலி பந்த ஆனந்தமூர்த்தி நீனு
நம்பிகேயில்லத ப்ரபஞ்சகனு நானு
அம்பரீசனிகே ஒலித அக்ரூரசக நீனு
டம்பகர்மியு நானு நிர்ஜிதனு நீனு (ஏனெந்து)

தூணிலிருந்து வந்த ஆனந்தமே உருவானவன் நீ
எதன்/யார் மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் மனிதன் நான்
அம்பரீசனை காப்பாற்றிய - அக்ரூரரின் நண்பன் நீ
தற்பெருமை கொண்டவன் நான் - உலகத்தை வென்றவன் நீ (ஏனெந்து)

திருப்பதிய வாசா வெங்கடேச நீனு
ஸ்மரிசி நின்னய நாம பதுகுவவ நானு
பிரிதுள்ளவ நீனு மொரெஹொக்கவ நானு
ஸ்ரீகாகிநெலெ ஆதிகேசவனு நீனு (ஏனெந்து)

திருப்பதியில் இருக்கும் வெங்கடேன் நீ
உன்னையே எப்போதும் நினைத்து வணங்குபவன் நான்
பல பெருமைகளைக் கொண்டவன் நீ; உன் கருணையை வேண்டுபவன் நான்
ஸ்ரீ காகிநெலெ ஆதிகேசவன் நீ (ஏனெந்து)

***

1 comment:

maithriim said...

சொற்கள் அனைத்தும் அருமை. நம் ஒவ்வொருவரின் மன நிலையை பிரதிபலிக்கிறது. கனகதாசருக்கு என் வந்தனம்.