Wednesday, November 16, 2016

தாசரின் வீட்டைக் காப்பேன்


தாசரின் வீட்டைக் காப்பேன்

கனகதாசரின் இன்னொரு அற்புதமான பாடல். ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றி, பாடி அவன் கோயிலில் வேலை செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவனைப் புகழ்ந்து பூசிக்கும் பக்தர்களின் வீட்டிலும் பல வேலைகளைச் செய்வேன். காசே இல்லாமல் அவர்களுக்கு பல வகைகளில் உதவியாக இருப்பேன் என்று பாடுகிறார்.

***

பண்டனாகி பாகிலு காயுவே நா
வைகுண்ட ஸ்ரீ ஹரிய தாசர மனெயா (பண்டனாகி)

ஒரு வேலைக்காரனாய், (வீட்டை) காவல் காப்பேன், நான்
வைகுண்டபதியான ஸ்ரீஹரியின் பக்தர்களின் வீட்டை (பண்டனாகி)

ஹொரெசுத்து பிரகார சுத்தி நா பருவே
பருவ ஹோகுவர விசாரிசித்திருவே
கரெதி கம்பிய பொத்து திருகுத இருவே
ஸ்ரீ ஹரிய சன்முகத ஒலகதல்லிருவே (பண்டனாகி)

வீட்டைச் சுற்றிச்சுற்றி வருவேன்
வீட்டுக்கு வருபவர் போகுபரை விசாரித்தே அனுப்புவேன்
இரும்புக் கம்பியைப் பிடித்தவாறே சுற்றி வருவேன்
ஸ்ரீஹரியின் திருமுகம் எப்போதும் தெரியுமாறு அங்கேயே இருப்பேன் (பண்டனாகி)

வேளே வேளேகே நான் ஊளிகே மாடுவே
ஆள கொண்டிகே சாமராவ பீசுவே
தாள மத்தள பிருங்கி மேளகிந்தள கூடி
ஸ்ரீ லோலன பாத கொண்டாடுத்தலிருவே (பண்டனாகி)

வேளா வேளைக்கு கொடுத்த வேலைகளைச் செய்வேன்
தேவைப்படும்போது சாமரம் வீசுவேன்
மத்தளம், மேளம் ஆகியவை கொண்டு தாளத்துடன்
ஸ்ரீபதியின் பாதங்களைப் பற்றி பாடிக் கொண்டிருப்பேன் (பண்டனாகி)

மீசலு ஊளிகே மாடிகொண்டிருவே
சேஷ பிரசாதவ உண்டு கொண்டிருவே
சேஷகிரி காகிநெலெ ஆதிகேசவன
தாசர தாசர தாசர மனெயா (பண்டனாகி)

சொல்லப்படும் வேலைகளைச் செய்து வருவேன்
மீந்து போகும் பிரசாதங்களை உண்டு வருவேன்
சேஷகிரி காகிநெலெ ஆதிகேசவனின்
பக்தரின் பக்தரின் பக்தரின் வீட்டை (பண்டனாகி)

***

1 comment:

maithriim said...

அருமையான பாடல். அடியவருக்கு அடியவராக இருப்பது தான் பெரும் பாக்கியமே.