Tuesday, November 15, 2016

பஜிஸி பதுகெலோ மானவா

பஜிஸி பதுகெலோ மானவா

கனகதாசர். புரந்தரதாசரின் சமகாலத்தவர். பிராமண குலத்தில் பிறக்காத காரணத்தினால், உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டவர். ஆனால், கண்ணன் மேல் இருந்த இடையறா பக்தியினால், ‘ஆதிகேசவன்’ என்னும் தன் அங்கிதம் (signature) கொண்டு எண்ணற்ற பாடல்களைப் பாடியவர்.

இவரது பக்தியைக் கண்டு, ஸ்ரீவியாசராயர் இவருக்கு ஆசி புரிந்தார். தன் சீடனாகவும் ஏற்றுக் கொண்டார். கனகதாசரின் ஒரு பாடலை இன்று பார்ப்போம்.

இறைவனின் பாதத்தைப் பற்றிக் கொண்டு, அவன் புகழைப் பாடி வந்தால், மறுபிறவி இல்லாமல் முக்தி அடையலாம் என்ற கருத்தைக் கொண்ட பாடல்.

***

பஜிஸி பதுகெலோ மானவா
அஜபவேந்திராதிகள வந்திசுவ பாதவனு (பஜிஸி)

புகழ்த்து பாடி பிழைத்துக் கொள் மனிதனே
பிரம்மன் & இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் பாதத்தை (பஜிஸி)

பாகசாசன கொலிது பலிய மெட்டித பாத
காகு ஷகடன துளிது கொந்த பாத
லோகேஷனிகே ஒலிது பூஜெகொம்புவ பாத
லோக பாவன கங்கே ஜனிசித பாத (பஜிஸி)

இந்திரனுக்கு அருள் புரியும்; பலியை மிதித்த பாதம்
ஷகடாசுரனை மிதித்துக் கொன்ற பாதம்
சிவனுக்கு அருள் புரிந்து, அவரால் பூஜை செய்துக் கொள்ளப்படும் பாதம்
உலகத்தைக் காக்கும் கங்கையை உயிர்ப்பித்த பாதம் (பஜிஸி)

கல்லாத அஹல்யேய சுத்த மாடித பாத
ஒலிது பார்த்தன ரதவ தூளித பாத
கலி துரியோதனன கெளெகே அடகிசித பாத
பலத காளிங்கன ஹெடெய துளித பாத (பஜிஸி)

கல்லாகி இருந்த அகல்யையை உயிர்ப்பித்த பாதம்
அர்ச்சுனனின் ரதத்தை (மிதித்து) அலங்கரித்த பாதம்
கலி ஆவேசமான துரியோதனனை கீழே தள்ளி அடக்கிய பாதம்
காளிங்கனின் தலை மேல் நடனமாடிய பாதம் (பஜிஸி)

கருட சேஷாதிகளு ஹொத்து திருகுவ பாத
தரெய ஈரடி மாடி அளெத பாத
சிரி தன்ன தொடெய மேலே இத்து ஒட்டுவ பாத
சிரிகாகினெலெ ஆதிகேசவன பாதவ (பஜிஸி)

கருடன் சேஷன் ஆகியவர்கள் தூக்கிக் கொண்டு திரியும் பாதம்
தன் இரண்டு அடிகளால் உலகை அளந்த பாதம்
இலக்குமி தன் தொடை மேல் வைத்து பூஜை செய்யும் பாதம்
காகினெலெ ஆதிகேசவனின் பாதத்தை (பஜிஸி)

***



***


1 comment:

maithriim said...

அற்புதம்!