Wednesday, September 30, 2015

பக்தி vs முக்தி

பக்தி vs முக்தி

இறைவனின் வேண்டும்போது எதைக் கேட்பது? பக்தியா அல்லது முக்தியா? இவ்விரண்டையும் கேட்டவர்களுக்கு கடைசியில் என்ன கிடைத்தது? அவர்கள் என்ன ஆனார்கள்? விஜயதாசரின் இந்தப் பாடலைப் பார்ப்போம்.

***

பக்தி சுகவோ ரங்கா முக்தி சுகவோ
பக்தி சுகவோ முக்தி சுகவோ
யுக்திவந்தரெல்லா ஹேளி (பக்தி)

பக்தி நல்லதா ரங்கா முக்தி நல்லதா
பக்தி நல்லதா முக்தி நல்லதா
புத்திமான்களே கொஞ்சம் சொல்லுங்கள் (பக்தி)

பக்தி மாடித ப்ரஹ்லாத முக்தியனு படெது கொண்டா
முக்தி பேடித துருவராய முக்தியிந்த ஹரியா கண்டா (பக்தி)

பக்தி செய்த பிரகலாதனுக்கு இறுதியில் முக்தி கிடைத்தது
முக்தி கேட்ட துருவனுக்கு, இறுதியில் முக்தி கிடைத்து, ஹரியின் தரிசனமும் கிடைத்தது (பக்தி)

பக்தி மாடித அஜாமிளனு அந்த்யதல்லி ஹரியா கண்டா
முக்தி பேடித கரிராஜ துரிதகளனு களெது கொண்டா (பக்தி)

பக்தி செய்த அஜாமிளன் இறுதியில் ஹரியைக் கண்டான்
முக்தி கேட்ட கஜேந்திரன் (என்னும் யானை), தன் கஷ்டங்களைப் போக்கிக் கொண்டான் (பக்தி)

பக்தி முக்திதாத நம்ம லக்குமி அரச விஜய விட்டல
ஷக்த தான் எனுத பஜனே மாடிரோ (பக்தி)

பக்தி, முக்தி இவ்விரண்டையும் கொடுக்கக்கூடிய நம் விஜய விட்டலனே
சக்தி வாய்ந்தவன் என்று பஜனை செய்யுங்கள் மக்களே (பக்தி)

***



Tuesday, September 29, 2015

ஹனும பீம மத்வ...



இன்றைய பாடலை எழுதியவர் ஸ்ரீ வியாசராயர். புரந்தரதாசரின் குருவான இவரது இன்னொரு புகழ் பெற்ற பாடல் - கிருஷ்ணா நீ பேகனே பாரோ - அனைவரும் அறிந்ததே.

இன்றைய பாடலில், ஹனும பீம மத்வ அவதாரங்களைப் பற்றி பாடுகிறார்.

***



ஜய வாயு ஹனுமந்தா ஜய பீம பலவந்தா
ஜய பூர்ண மதிவந்தா சலஹோ சந்தா (ஜய)

ஜய வாயு ஹனுமந்தா, ஜய பீம பலவந்தனே
ஜய மத்வ மதிவந்தா, என்னைக் காப்பாற்றுவாய் நன்றாக (ஜய)

அஞ்ஜனெயலி ஹுட்டி அந்து ராமர சேவே
நந்ததிந்தலி மாடி கபி பலவ கூடி
சிந்து லங்கிசி களன வன பங்கிசி சீதே
டுங்குரவ கொட்டே லங்காபுரவ சுட்டே (ஜய)

அஞ்சனாதேவியிடம் பிறந்து, அன்று ராமனின் சேவை
சந்தோஷத்துடன் செய்து, சக-குரங்குகளின் உதவியுடன்
கடல் கடந்து அங்கே வனத்தை அழித்து சீதைக்கு
அடையாள முத்திரை கொட்டாய், இலங்கையை அழித்தாய் (ஜய)

ஹரிகே சூடாமணியனித்து கரிகள கூடி
ஷரடியனு கட்டி அரிபலவ ஹுடிகுட்டி
உரக பந்தனதிந்த கபிவரரு மைமரெயே
வர சஞ்ஜீவனவ தந்து பதுகிசிதே (ஜய)

ஸ்ரீராமனிடம் சூடாமணி கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து
(கடல் மேல்) பாலத்தைக் கட்டி, யுத்தத்தின் போது
நாகாயுதத்தால் ராமர் படையினர் மயக்கமடைந்துவிட
சஞ்சீவி மலையை கொண்டு வந்து அனைவரையும் காப்பாற்றினாய் (ஜய)

த்வாபரதலி பாண்டு பூபநாத்மஜனாதே
ஸ்ரீபார்த்தசாரதி ஹரி பஜக நீனாதே
பாபி மாகத பக கீசக ஹிடிம்பகர
கோபதிந்தலி தரிதே மூர்ஜகதி மெரெதே (ஜய)

த்வாபர யுகத்தில் பாண்டுவின் புத்திரனாக அவதரித்தாய்
ஸ்ரீ பார்த்தசாரதி என்கிற ஹரியின் பக்தனாக ஆனாய்
கெட்டவர்களான பகாசுரன், கீசகன், ஹிடிம்பன் ஆகியோரை
கோபத்துடன் கொன்றாய், மூவுலகத்தையும் காத்தாய் (ஜய)

துரதல்லி துர்யோதனன பலவனு தரிதே
அரிது துஷ்ஷாசனன ஒடலன்னு பகெதே
உரவ தப்பிசி கௌரவன்ன தொடெகள முரிதே
ஹரிய கிங்கர துராந்தரகாரு சரியே (ஜய)

யுத்தத்தில் துரியோதனின் பலத்தைக் குறைத்தாய்
துச்சாதனனின் உடலைக் கிழித்தாய்
கௌரவர்களின் தொடைகளைக் கிழித்து அவர்களைக் கொன்றாய்
ஹரியின் எதிரிகளை பந்தாடினாய், அது சரியே (ஜய)

கலியுகதலி கள்ளருடிசி துர்மதகளனு பலிசி
ஸ்ரீஹரிய குணகளனு தூஷிசி
கலியனனு சரிசே குருவாகி அவதரிசி
களர துர்மத முரிதே ஸ்ரீக்ருஷ்ண பரனெந்தே (ஜய)

கலியுகத்தில் பலர் அவரவர் மதங்களைப் பரப்ப வந்தபோது
ஸ்ரீஹரியின் குணங்களைத் திட்டியபோது,
இவைகளை சரிசெய்ய, குருவாக் அவதரித்தாய்
அந்த மதங்களை வீழ்த்தினாய், ஸ்ரீகிருஷ்ணனே தெய்வம் என்றாய் (ஜய)

****


***


Monday, September 28, 2015

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்கு பாரமா?



ஹனும பீம மத்வ என்னும் மூன்று அவதாரங்களைப் பற்றிப் பேசும் இன்னொரு பாடல். தாசர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படும் - நால்வரில் (ஸ்ரீபாதராயர், வியாசராயர், புரந்தரதாசர் & விஜயதாசர்) - விஜயதாசர் எழுதிய பாடல் இது.

ஹனும பீம மத்வர் ஆகியோர்களின் பெருமைகளைச் சொல்லி, இவ்வளவு பெருமைகளை உடையவனே, நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய் என்று மன்றாடும் விஜயதாசரின் அருமையான பாடல் இது.

***

பாரவே பாரதி ரமணா, நினகே நான் (பாரவே)

பாரதிதேவியின் ரமணனே, உனக்கு நான் மிகவும் பாரமாக தெரிகிறேனா? (பாரவே)
(ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய்?)

லங்கா நாதன பிங்கவ முரிது
அகளங்க சரிதன கிங்கர நெனெசிதி
பங்கஜாக்‌ஷிகே அங்கிததுங்குர வித்தே
ஷங்கே இல்லதே நீ லங்கேயா தஹிசிதே (பாரவே)

லங்கா அரசனின் கர்வத்தைப் போக்கி
அவன் மகன் & முழு சேனையையும் அழித்தாய்
சீதைக்கு அடையாள முத்திரை கொடுத்தாய்
பயமில்லாமல், நீ இலங்கையை எரித்தாய் (பாரவே)

சோம குலதி நிஸ்ஸீம மஹிம நெனெசி
தாமஸ பகன நிர்தூமவ மாடிதே
காமினி மோஹிசே ப்ரேமதி சலஹிதே
தாமர சாக்‌ஷன ப்ரேமவ படெதே (பாரவே)

சோம குலத்தில் உதித்து
பகாசுரனை கொன்றாய்
ஹிடிம்பி என்னும் அரக்கி உன் மேல் ஆசைப்பட்டபோது, (வேதவியாசரின் ஆணைக்கேற்ப) அவளைத் திருமணம் செய்துகொண்டாய்
தாமரை மணாளன் (கண்ணணின்) பாசத்தைப் பெற்றாய் (பாரவே)

வேதவ்யாசர சேவெய மாடி
மோததிந்த பஹு வாதகளாடி
அதம சாஸ்திரகள ஹோமவ மாடி
விஜய விட்டலன சேவக நெனெசிதி  (பாரவே)

வேதவியாசருக்கு பூஜைகளை செய்து
பற்பல விவாதங்களை மேற்கொண்டு
மற்ற சாஸ்திரங்களுக்கு எதிராக வாதிட்டு, அவற்றை வென்று
விஜய விட்டலனின் சேவகன் என்று எப்போதும் எண்ணிக் கொண்பவனே, உனக்கு (பாரவே)

***





Friday, September 25, 2015

இறைவன் எழுதிய கடிதம்



இறைவன் நம் எல்லார்க்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் என்னெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது? நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது என்று எழுதியிருக்கிறது? இறைவன் ஆனவன், அவனே, தன் கைப்பட எழுதியிருப்பதால், தயவு செய்து அதை பின்பற்றுமாறு புரந்தரதாசர் இந்தப் பாடலில் எழுதியிருக்கிறார்.

கடிதம் = உடம்பு / வாழ்க்கை.

இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பை, இந்த வாழ்க்கையை வீணாக்காமல் எப்படியெல்லாம் நல்வழியில் செலவழிக்கலாம் என்று இந்தப் பாடலில் பார்க்கலாம். மிகவும் எளிமையான பாடல். மக்களுக்கு அறிவுரை கூறுமாறு அமைந்த இன்னொரு தாசர் பாடல்.

***

காகத பந்திதே நம்ம கமலநாபனது
ஈ காகதவன்னு ஓதிகொண்டு கால களயிரோ (காகத)

நம் பத்பனாபனின் கடிதம் வந்துள்ளது
இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டு காலத்தைக் கழியுங்கள் (காகத)

காம க்ரோதவ பிடிரெம்போ காகத பந்திதே
நேமெ நிஷ்டெயொள் இரிரெம்போ காகத பந்திதே
தாமஸ ஜனர கூடதிரெம்போ காகத பந்திதே
நம்ம காமனய்யனு தானே பரெத (காகத)

காமம் விரோதம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள்...
பூஜை, புனஸ்காரங்கள் (ஆகிய தினசரி கடமைகளில்) ஈடுபடுங்கள்..
தாமஸ (கீழ்த்தரமான நோக்கங்களை உடைய) மக்களிடமிருந்து விலகி இருங்கள்...
நம் மன்மதன் தந்தை தானே எழுதிய (காகித)

ஹெண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
ஹொன்னின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
மண்ணின் ஆசே பிடிரெம்போ காகத பந்திதே
நம்ம கமலனாபனு தானே பரெத (காகத)

பெண்ணாசையை விட்டுவிடுங்கள்..
பொன்னின் ஆசையை விட்டுவிடுங்கள்..
மண்ணின் ஆசையை விட்டுவிடுங்கள்..
நம் பத்பனாபன் அவனே எழுதிய.. (காகித)

கெஜ்ஜெயெ காலிகெ கட்டிரெம்போ காகத பந்திதே
ஹெஜ்ஜெ ஹெஜ்ஜேகெ ஹரியெனிரெம்போ காகத பந்திதே
லஜ்ஜெயெ பிட்டு குணியிரெம்போ காகத பந்திதே
நம்ம புரந்தர விட்டல தானே பரெத (காகத)

கால்களில் கொலுசு அணியுங்கள்...
ஹரி என்றபடியே நடனமாடத் துவங்குங்கள்...
வெட்கத்தை விட்டு ஆடுங்கள்..
நம் புரந்தரவிட்டலன் தானே எழுதிய.. (காகித)

***

இந்த தொகுப்பில் முதல் பாடலே நாம் இன்று பார்த்தது.



***










Thursday, September 24, 2015

பாரதி தேவி.



பாரதி தேவி

ஸ்ரீமத்வர் நிறுவிய த்வைத சித்தாந்தத்தில் முக்கியமான கோட்பாடு - Hierarchy. கடவுளர்களிலிருந்து இந்த hierarchy, set செய்து வைத்துள்ளனர். அந்தப் பட்டியல் இங்கு உள்ளது.

https://dvaitavedanta.wordpress.com/2009/03/15/taratamya-of-sri-madhvacharya/

இந்த hierarchyல் மேலே, முதல் இடத்தில் ஸ்ரீமன் நாராயணன். அவனே சர்வோத்தமன். அனைத்திலும் / அனைவரிலும் உயர்ந்தவன். பிறகு வருபவர் ஸ்ரீலக்‌ஷ்மி. மூன்றாவது இடத்தில் வருபவர் பிரம்மா & வாயு பகவான்.
நான்காவது இடத்தில் இவர்களது மனைவிகள் - சரஸ்வதி & பாரதி தேவி.



இந்த பாரதி தேவியைப் பற்றிய பாடலே இன்று பார்க்கப் போவது. புரந்தரதாசர் பாடிய இது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

இந்தப் பதிவுக்காக இவரின் படத்தைத் தேடலாம்னா, அஃபீஷியலான படமே எங்கும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பல இணைய குழுமங்களில் கேட்டும் பார்த்துட்டேன். ம்ஹூம். கிடைத்தால் மறுபடி பதிவிடுகிறேன். அதுவரை பாடலைப் பார்த்துவிடுவோம்.

***

பாரதி தேவிய நெனெ நெனெ
நிருத பகுதிகிது மனெ மனெ (பாரதி)

பாரதி தேவியை நினை மனமே
நிலையான பக்திக்கு இதுவே வழி வழி (பாரதி)

மாருதனர்தனாகி சுசரித கோமலாங்கி
சாரசாக்‌ஷி க்ருபாங்கி ஆபாங்கி (பாரதி)

மாருதனின் மனைவி நற்பண்புகளை உடைய இனிமையானவள்
தாமரை போன்ற கண்களை உடையவள், கருணையே உருவானவள் (பாரதி)

கிங்கிணி கிணிபாத பங்கஜ நூபுர
கன்கண குண்டித ஆங்க்ருத தேஹ (பாரதி)

கிங்கிணி என ஒலிக்கும் புனிதமான கொலுசு அணிந்தவள்
பளபளக்கும் ஆபரணங்களை உடலெங்கும் அணிந்தவள் (பாரதி)

சங்கர சுரவர வந்தித சரணே
கிங்கரி புரந்தரவிட்டலன கருணே (பாரதி)

சிவன் மற்றும் மற்ற கடவுளர்கள் இவளை வழிபடுவர்
இவள் புரந்தரவிட்டலனின் கருணையைப் பெற்றவள் (பாரதி)

***

திருமதி.சுதா ரகுனாதனின் குரலில் இந்தப் பாடல்:



***


Wednesday, September 23, 2015

வாராய் நீ வாராய், கிருஷ்ணா!



இன்றைய பாடலை இயற்றியது ஸ்ரீவாதிராஜர். மிகவும் எளிமையான பாடல். அஷ்டோத்திரத்தை அப்படியே பக்கத்து பக்கத்தில் போட்டு பாட்டு வரிகளில் எழுதியதைப் போல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைக் கொடுத்து விட்டால், பாட்டு எளிதாகப் புரிந்துவிடுகிறது.



ராமனை, கிருஷ்ணனை வரவேற்கும் இந்தப் பாடல் இதோ.

பாரோ பேக பாரோ நீல மேக வர்ணா
பாரோ பேக பாரோ பேலபுரத சென்னா (பாரோ)

வாராய் வேகமாய் வாராய், கருமை நிறத்தவனே
வாராய் வேகமாய் வாராய், பேலூரின் சென்ன கேசவனே (பாரோ)

இந்திரெ ரமண கோவிந்தா பேக பாரோ
நந்தன கந்த முகுந்தா பேக பாரோ (பாரோ)

இலக்குமியின் கணவனே கோவிந்தனே வேகமாய் வாராய்
நந்தகோபனின் மகனே முகுந்தனே வேகமாய் வாராய் (பாரோ)

தீர உதார கம்பீர பேக பாரோ
ஹார அலங்கார ரகுவீர பேக பாரோ
ருத்தா அனிருத்தா நிரவத்யா பேக பாரோ
ஹத்தா நேரித்தா சுப்ரசித்தா பேக பாரோ (பாரோ)

வீரனே தயாளனே கம்பீரமான தோற்றம் உடையவனே
மாலை அலங்காரத்துடன் காணப்படும் ராமனே
எங்கும் வியாபித்திருப்பவனே, அனிருந்த்தனே, எவ்வித களங்கமும் இல்லாதவனே
யானையின் மேலேறி வரும், மிகவும் பிரபலமானவனே (பாரோ)

ரங்கா உத்துங்கா நரசிங்கா பேக பாரோ
மங்கள மஹிம சுபாங்கா பேக பாரோ
ஐயா விஜய சஹாயா பேக பாரோ
அஹ்யத்ரி வாசா ஹயவதனா பேக பாரோ (பாரோ)

ரங்கனே அழகிய சிங்கனே
மங்களகரமான மகிமை பொருந்தியவனே, அழகிய அங்கங்களைக் கொண்டவனே
தலைவனே, (பக்தர்களைக்) காத்திட வேகமாய் வருபவனே
பாம்பின் மேல் படுத்திருப்பவனே, ஹயவதனனே, வேகமாய் வாராய் (பாரோ)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடல்:

***










Tuesday, September 22, 2015

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

இறைவனின் பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் மொத்தம் 16 என்பர். (அதற்கு மேலும் சிலவற்றை சேர்ப்போரும் உண்டு). இறைவனை வரவேற்று, உட்கார ஆசனம் கொடுத்து, என்றவாறு போகும் அந்த 16 உபசாரங்கள் இங்கே விரிவாக உள்ளது. http://www.salagram.net/upacharas.html

இதில் தூபாரத்தி என்று ஒரு உபசாரம் சொல்லப்பட்டுள்ளது. தூபாரத்தி = நெய்யில் முக்கி எடுக்கப்பட்ட திரியில் விளக்கேற்றி இறைவனுக்கு காட்டப்படும் ஆரத்தி. அப்படிப்பட்ட ஆரத்தி பற்றி மட்டுமே ஒரு முழுமையான பாடலை இயற்றியுள்ளார் புரந்தரதாசர்.



ஆரத்தி காட்டும்போது மணி அடிப்பது வழக்கம். வீட்டில் மணியுடன், ஜாங்கடே என்றழைக்கப்படும் கருவியையும் சிலர் அடிப்பர். கோயில்களில் கூடுதலாக மத்தளம், முரசு ஆகிய வாத்தியங்களும் வாசிப்பதுண்டு. தற்போது இவை அனைத்தும் தானியங்கிகள் ஆகிவிட்டன.



இத்தகைய கருவிகளின் இனிமையான சத்தத்தின் நடுவே, சாம்பிராணி மற்றும் இன்னபிற நறுமண பொருட்களின் வாசத்துடன் நடந்து கொண்டிருக்கும் இறைவனின் பூஜையில், தற்போது காட்டப்படும் ஆரத்தியை பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறார் தாசர்.

வாருங்கள், நாமும் அவருடன் சேர்ந்து பூஜையை கவனிப்போம்.

***

தூபாரத்தியா நோடுவ பன்னி - நம்ம
கோபாலகிருஷ்ண தேவர பூஜைய (தூபாரத்தியா)

தூபாரத்தியை பார்க்கலாம் வாங்க - நம்
கோபாலகிருஷ்ணனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

மத்தளே ஜாகடே தாள தண்டிகே பேரி
தத்திமி திமிகெந்து ரவசகளு
அத்புத சங்க நாதகளிந்ததி நம்ம
பத்பனாப தேவர திவ்ய பூஜைய.. (தூபாரத்தியா)

மத்தளம், ஜாங்கடே, தாளத்துடன் கூடிய முரசு
தத்திமி திமி என்ற லயத்துடன்
அற்புதமான சங்க நாதத்துடன், நம்
பத்பனாபனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

அகரு சந்தன தூப குக்குள சாம்ப்ராணி 
மகமதிசுவ தாரதியு
விவிதாத ஏகாரதி பத்தி நம்ம
ஜகன்னாத விட்டல தேவர பூஜைய (தூபாரத்தியா)

அகர், சந்தனம், தூபம், குங்கிலியம், சாம்பிராணி
ஆகியவற்றின் நறுமணத்தினால் ஆன ஆரத்தி;
விதவிதமான ஏகாரத்தி (ஒற்றைத்திரி) ஏற்றி நம்
ஜகன்னாத விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

ஹரி சர்வோத்தமன பக்தராதனா
பரம மங்கள மூர்த்தி பாவனனா
பர தெய்வவாதந்த ஸ்ரீ ரங்க நாதன
புரந்தர விட்டலன தேவர பூஜைய (தூபாரத்தியா)

அனைவரிலும் உத்தமனான, பக்தர்களின் பாதுகாவலனான
அழகிய வடிவம் கொண்டவனான
ஸ்ரீ ரங்கனாதனின், புரந்தர விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

***




Monday, September 21, 2015

ரங்கன் எங்கு இருக்கிறான்?



இறைவன் எங்கே இருக்கிறான்? நாம் கூப்பிட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல், எப்படி நம்மை வந்தடைந்து, நம்மை துன்பத்திலிருந்து காப்பாற்றுவான் என்கிற கேள்விகளுக்கு பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார் தாசர்.

பிரகலாதன் கூப்பிட்டவுடன் ஸ்ரீஹரி வந்தானே?
அஜாமிளன் தன் இறுதிகாலத்தில் நாராயணா என்றவுடன் ஓடோடி வந்தானே?
கஜேந்திரன் என்கிற யானையை எப்படி விரைந்து வந்து காப்பாற்றினான்?
திரௌபதிக்கு உதவியனும் அவன்தானே?

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக, இறைவன் எங்கும் இருப்பவன், அவனை எப்பொழுதும் நினைத்து, பாடி, தொழுது வருபவர்கள் மனதிலேயே இருந்து காப்பவன் என்று அருமையாக முடிக்கிறார்.




***

எல்லிருவனோ ரங்க எம்ப சம்சய பேடா
எல்லி பக்தரு கரெதரல்லே ஒதகுவன்னு (எல்லி)

எங்கே இருப்பானோ ரங்கன், என்கிற சந்தேகமே வேண்டாம்
எங்கே பக்தர் கூப்பிடுகிறாரோ, அங்கே உடனடியாக வந்து சேருவான் (எல்லி)

தரள பிரஹ்லாத ஸ்ரீ ஹரி விஸ்வமயனெந்து
பரெதோதலெ அவன பிதா கோபதிந்தா
ஸ்திரவாதடீ கம்பதொளு தோர எனலு
பரதிபரலு அதக்கே வைகுண்ட நெரமனயே (எல்லி)

சிறுவன் பிரகலாதன், ஸ்ரீ ஹரி உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று சொல்ல,
அவன் தந்தை கோபத்துடன்,
இந்த கம்பத்தில் ஹரி இருக்கிறாரா, காட்டு என்று சொல்ல
உடனடியாக அங்கே தோன்றினார் ஹரி. வைகுண்டம் என்பது அருகிலேயேவா இருந்தது? (எல்லி)

பாபகர்மவ மாடித அஜாமிளன எமபடரு
கோபதிந்த எளயுதிரே பீதியிந்த
காபுத்ரனனு கரெயே கேளி ரக்‌ஷிஸே
ஸ்வேத த்வீபவீதரகே அதி சமீப தல்லிஹுதே (எல்லி)

வாழ்க்கை முழுவதும் பாவங்களைச் செய்த அஜாமிளனைக் கூப்பிட்டுச் செல்ல வந்த எமதூதர்கள்
கோவத்துடன் அவனை இழுத்தனர்; அப்போது பயத்துடன்
நாராயணனை (அஜாமிளன்) கூப்பிட்டதும், வந்தானே,
ஸ்வேதத்வீபம் என்னும் இடம் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறதா என்ன? (எல்லி)

கரிராஜனனு நெகளு நுங்குதிரே பயதிந்தா
மொரெயிடலு கேளி அதி த்வரதிதிந்தா
கருணதலி பந்தனவ பிடிசலா கஜராஜ
இருவ சரசிகே அனந்தசானவு மும்மனெயே (எல்லி)

கஜேந்திரன் என்னும் யானை (தன் காலை முதலை பிடித்ததும்) பயத்துடன்
இறைவனிடம் முறையிட்டதும், அதிவேகமாக
கருணையுடன் சென்று முதலையிடமிருந்து அந்த யானையை மீட்டினான்; அந்த யானை
இருந்த குளம், அனந்தனின் வீட்டின் ஒரு பகுதியா என்ன? (எல்லி)

குருபதியு த்ரௌபதிய சீரெயனு செளெயதிரே
தருணி ஹா கிருஷ்ணா எந்தொதரே கேளி
பரதிந்தா அக்‌ஷயாம் பரவித்தா
ஹஸ்தினாபுரிகு த்வாராவதிகு கூகளதெய (எல்லி)

குரு வம்சத்தின் அரசன், திரௌபதியின் சேலையை இழுக்கும்போது
அந்தப் பெண், கிருஷ்ணா என்று கூப்பிட்டத்தைக் கேட்டு
வந்து முடிவில்லாத ஆடையை அளித்த (அந்த கிருஷ்ணனின் இடமான)
துவாரகை, ஹஸ்தினாபுரத்திற்கு கூப்பிடு தூரத்திலா இருந்தது? (எல்லி)

ஹணுமஹத்துகளல்லி பரிபூர்ண நெந்தெனசி
கணனெயில்லதா மஹா மஹிம நெனிபா
கனக்ருபா நிதி நம்ம புரந்தரவிட்டலன
நெனெதவர மனதல்லி இஹனெம்ப பிருதிரலு (எல்லி)

எங்கும் வியாபித்திருக்கும், சர்வ வல்லமை படைத்த, பரிபூர்ணனான
எண்ணில் அடங்காத மகிமைகளைக் கொண்ட,
கருணைக்கடலான நம் புரந்தரவிட்டலனானவன்,
(அவனை) நினைத்தவரின் மனதில் கண்டிப்பாக இருப்பான் (இது நிரூபிக்கப்பட்ட உண்மை) (எல்லி)

***


இந்தப் பாடலின் ஒலிவடிவம் இங்கே:



***










Friday, September 18, 2015

அனும, பீம, மத்வர்.



த்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்தரதாசர் தன் பல பாடல்களில் இந்த மூன்று அவதாரங்களைப் பற்றியும் (ஒரே பாடலில் வருமாறு) பாடியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்தப் பாடல். அனுமன், பீமன் மற்றும் மத்வருக்கு ஒவ்வொரு பத்தி, அவர்களில் சிறப்புகளைப் பற்றி சொல்லி, புரந்தரவிட்டலனின் பெயரோடு பாடலை முடிக்கிறார்.



வீர ஹனும பஹு பராக்ரமா
சுஞானவித்து பாலிசென்ன ஜீவரோத்தமா (வீர)

வீரனான ஹனுமனே, வீரனே
நல்ல ஞானத்தைக் கொடுத்து என்னைக் காப்பாற்று ஜீவர்களில் உத்தமனே (வீர)

ராம தூத நெனெசி கொண்ட நீ
ராக்‌ஷசர வனவரெல்ல கித்து பந்தே நீ
ஜானகிகே முத்ரே இத்து ஜகத்திகெல்ல ஹருஷவித்து
சூடாமணிய ராமகித்து, லோகக்கே முட்டெனிசி மரெவ (வீர)

ராமனின் தூதனாக அறியப் படுபவன் நீ
அரக்கர்களின் வனங்களைக் கொன்றுவிட்டு வந்தவன்
(ராமனிடமிருந்து கொண்டு வந்த) மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, முழு உலகத்திற்கும் ஆனந்தமளித்தவன்
(பின்னர் சீதையிடமிருந்து) சூடாமணியை ராமனிடம் கொடுத்து, உலக மக்களின் பிரியத்திற்கு பாத்திரமானவன் (வீர)

கோபி சுதன பாத பூஜிஸி
கதெய தரிசி பகாசுரன சம்ஹரிசிதே
த்ரௌபதிய மொரெய கேளி மத்தே கீசகன கொந்து
பீம நெம்ப நாம தரிசி சங்க்ராம தீரனாகி ஜகதி (வீர)

கோபிகையின் மகனான கிருஷ்ணனின் பாதங்களை பூஜித்தவன்
கதையைக் கொண்டு பகாசுரனைக் கொன்றவன்
திரௌபதியின் கோரிக்கையை ஏற்று, கீசகனைக் கொன்று
பீமன் என்ற பெயரைக் கொண்டு, போர்களை வென்றவன் (வீர)

மத்ய கேஹனல்லி ஜனிஸி நீ
பால்யதல்லி மஸ்கரீய ரூப கொண்டே
சத்யவதிய சுதன பஜிஸி சன்முகதி பாஷ்ய மாடி
சஜ்ஜனர பொரெவ முத்து புரந்தர விட்டலன தாச (வீர)

மத்யகேஹ பட்டர் என்பவர் வீட்டில் பிறந்தவன்
சிறிய வயதில் துறவி ஆனவன்
சத்யவதியின் மகனான வியாஸரை வணங்கி, பல பாஷ்யங்களை (நூல்களுக்கான விளக்கங்களை) எழுதியவன்
நல்லவர்களைக் காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனின் தாசன் (வீர)

***


இந்தப் பாடலை பாடி, வரிகளுக்குத் தகுந்தாற்போல் படங்களைக் காட்டும், மைசூர் ராமசந்திராச்சார் அவர்கள்.



Thursday, September 17, 2015

பிள்ளையாரப்பா!


நம்மம்ம சாரதே!

மிகவும் பிரபலமான இந்தப் பாடலை இயற்றியவர் கனகதாசர். இன்றைய நாயகனான விநாயகரைக் குறித்து பாடியதாகும். அவரின் தாயான பார்வதியிடம், விநாயகரின் பெருமைகளைக் கூறி, இப்படிப்பட்டவர் யார் - அது நம் கணபதிதானே என்று பதில் கூறுவதைப் போல் அமைந்துள்ளது இப்பாடல்.


நம்மம்ம சாரதே உமா மகேஸ்வரி
நிம்மொளகிவன் யாரம்மா (நம்மம்ம)

எங்கள் தாயே சாரதே, உமா மகேஸ்வரி,
உன் உள் உறைபவன் யாரம்மா (நம்மம்ம)

கொம்மகொளன வைரி சுதனாத சொண்டில
ஹெம்மெய கணநாதனே கணம்மா (நம்மம்ம)

பூக்களால் ஆன வில் ஏந்திய மன்மதனின் எதிரியான சிவனின் மகன்,
நம் பெருமைமிகு கணபதிதான் அவன் (நம்மம்ம)

மோரெ கப்பின பாவ மொரத கலத கிவி
கோரெ தாடெயன் யாரம்மா
மூரு கண்ணன சுத முரிதிட்ட சந்திரன
தீரத கணநாதனே அம்மய்யா ( நம்மம்ம)

கருப்பு நிற (யானை போன்ற) முகம், முறத்தைப் போன்ற காதுகள்,
தந்தங்களை உடையவன் யாரம்மா?
மூன்று கண்களை உடையவனின் மகன், சந்திரனை முறித்தவன்,
வீரமான கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

உட்டதட்டியு பிகிதுட்ட சல்லனதா திட்டதான் இவன் யாரம்மா
பட்டதா ராணி பார்வதியா குமாரனு
ஹொட்டேயா கண நாதனே கணம்மா (நம்மம்மா)

இடுப்பில் வேட்டியை இறுக்கி கட்டியவன், (அவனை வணங்குபவர்களின்)
எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் அகற்றுபவன்,
சிவனின் ராணி பார்வதியின் குமாரன் தொந்தியை உடைய கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

ராசி வித்யேய பல்ல ரமணி கொம்பலனொல்ல பாஷிக இவன்யாரம்மா
லேசாகி ஜனர சலகுவ காகி நெலெயாதி கேசவ தாச காணே (நம்மம்மா)

அளவில்லா ஞானத்தை உடையவன்
பெண்களின் மேல் மோகம் கொள்ளாதவன்
மக்களின் துன்பங்களைப் போக்கும் காகிநெலெ
ஆதிகேசவனின் தாசன், இந்த கணபதி.. (நம்மம்மா)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடலைக் கேளுங்கள்.