Monday, June 1, 2015

பாடல்களை எப்படிப் பாட வேண்டும்?


மலகி பரமாதரதி பாடலு
குளிது கேளுவா குளிது பாடலு நிலுவா
நிந்தரே நலிவா, நலிதரே ஒலிவே நிமகெம்பா
சுலபனோ ஹரி தன்னவரனர
களிகே பிட்டகலனோ ரமாதவன
ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே..



சரணம், பல்லவி etc கொண்ட பாடல் அல்ல இன்று பார்க்கப்போவது. ஒரு சிறிய ஸ்லோகம் போன்றதொரு வரிகள் மட்டுமே. பாடல்களுக்கு முன் இப்படிப்பட்ட ஸ்லோகங்களைப் பாடுவது வழக்கம்.

மேற்சொன்ன புகழ்பெற்ற வரிகள், ஜகன்னாததாசர் எழுதிய ஹரிகதாம்ருத சாரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இதன் பொருள்?

இறைவனைப் பற்றிப் பாட வேண்டும். எப்படிப் பாடுவது? உட்கார்ந்து? நின்று? நடந்து? எப்படிப் பாடினால், அவனுக்குப் பிடிக்கும்? எப்படிப் பாடினால், எப்படி கேட்பான்? தாசர் சொல்கிறார் - படுத்துக் கொண்டு கூட அவன் புகழ் பாடலாம்.

மலகி பரமாதரதி பாடலு குளிது கேளுவா
படுத்துக் கொண்டு (அவன் புகழ்) பாடினால், உட்கார்ந்து கேட்பான்

குளிது பாடலு நிலுவா
உட்கார்ந்தவாறு பாடினால், நின்றுகொண்டு கேட்பான்

நிந்தரே நலிவா
நின்றுகொண்டு பாடினால், ஆடிக்கொண்டே கேட்பான்

நலிதரே ஒலிவே நிமகெம்பா
நாம் ஆடிக்கொண்டே பாடினால், என்னையே உங்களுக்குக் கொடுப்பேன் என்பான்

சுலபனோ ஹரி தன்னவரனர களிகே பிட்டகலனோ
ஹரியை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்; அவன் தன் பக்தர்களை விட்டு ஒரு கணமும் அகலாதவன்

ரமாதவன ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே
(இந்த உண்மைகளை அறியாமல்) அந்த லட்சுமிபதியை எப்படி திருப்திப்படுத்துவது என்று அறியாமல் மக்கள் சம்சார சாகரத்தில் மூழ்கித் திளைக்கிறார்களே!

***

அது சரி, இதற்கு உதாரணங்கள் உண்டோ? உண்டு.

பீஷ்மர். படுத்துக் கொண்டே சொன்னது விஷ்ணு சஹஸ்ரநாமம். குனிந்து கேட்ட கிருஷ்ணன் சொன்னது - நான் சொன்ன பகவத்கீதையை விட என்னைப் பற்றி சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகச் சிறந்தது.

புண்டரீகன். தன் தாய் தந்தையருக்கு சேவை செய்தவாறு இறைவன் புகழ் பாடுகையில், அவன் போட்ட செங்கல் மேல் நின்று விட்டலன் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.

பிரகலாதன். தூண் முன் நின்றவாறு இறைவனைப் பாடிய பிரகலாதன் முன் இறைவன் தோன்றி மகிழ்வித்தான்.

நாரதர். பாடி ஆடியவாறு திரியும் நாரதர் மேல் இறைவனுக்கு அதிக பிரியம் என்பது நாம் படித்து அறிந்ததே.

***






No comments: