Thursday, February 5, 2015

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான்...


இன்னொரு எளிமையான புரந்தர தாசர் பாடல்.

திருவீதி வலம் வந்து, மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் உற்சவரைப் பார்த்து பாடும்படியாக அமைந்த இந்த புகழ்பெற்ற பாடலை இன்று பார்ப்போம்.




***

பந்த நோடி கோவிந்தா கிருஷ்ணா
பந்த பந்த ஆனந்த தீர்த்த முனீந்த்ர வந்த்ய
ஹரி நந்த முகுந்தனு (பந்த)

கோவிந்தன், கிருஷ்ணன் வந்தான் பாருங்கள்
ஆனந்த தீர்த்தர் (மத்வர்) வணங்கிய ஹரி, முகுந்தன் வந்தான் (பந்த)

சரசிஜாக்‌ஷ தொரெயே சர்வர பொரெவ தயாநிதியே
கரிய வரன சக்ரதி உத்தரிசித
ஹரி நம்ம பாலிப பால்கடலொடெயனு (பந்த)

தாமரைக் கண்ணன், (நம்) தலைவன், அனைவரையும் ஆட்கொள்பவன், கருணைக் கடல்;
கஜேந்திரனை (யானையை) தன் சக்கிரத்தால் காப்பாற்றிய
ஹரி, பாற்கடலில் படுத்திருப்பவன் (பந்த)

இந்திர தேவ வந்த்யா இஷ்டர இந்து காவ்ய நித்யாநந்தா
சந்திர கோடி லாவண்ய முகதலி
சுந்தர அரளெல ஹாரகெ லிந்தலி (பந்த)

இந்திர தேவனால் வணங்கப் பெறுபவன்,
வணங்குபரை உடனே காக்கும் நித்யானந்தன்,
கோடி சந்திரன்(கள்) சேர்ந்தால் கிடைக்கும் ஒளி போன்ற முகத்தை உடையவன்,
அழகான இலைகளால் ஆன மாலைகளை அணிந்தவன் (பந்த)

சரண கமல காந்தே சர்வத மாள்புது தயவந்தே
தர தர ஜனரிகே கரெது வரவனிவ
சரசிஜாக்‌ஷ நம்ம புரந்தர விட்டலனு (பந்த)

ஒளி மிகுந்த சரணகமலத்தைக் கொண்டவன், அனைவரையும் ஆட்கொள்ளும் கருணையைக் கொண்டவன்
அனைத்து மக்களையும் அழைத்து வரங்களை அளிப்பவன்
தாமரைக் கண்ணன், அவனே நம் புரந்தர விட்டலன் (பந்த)

***



No comments: