Friday, February 13, 2015

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ..

ஜகன்னாத தாசர்.


ஹரிதாசர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். 18ம் நூற்றாண்டில், 80 வருடங்கள் வரை வாழ்ந்தவர். தன் முதல் 40வருடங்களுக்குப் பிறகு, விஜயதாசர் மற்றும் கோபாலதாசர்களில் அருள்+ஆசியால் தாச தீட்சை பெற்று ஜகன்னாத தாசர் ஆனவர். பின்னர் பற்பல பாடல்கள் இயற்றி, தன் 80வது வயதில், ஹரிகதாம்ருத சாரம் என்னும் மிகவும் உன்னதமான நூலைப் படைத்தவர்.

இந்த தளத்தில் இது இவரது முதல் பாடலாகும். மந்திராலய பல்கலைக்கழகத்தில் படித்து, ராகவேந்திரரின் தீவிர பக்தரான இவர், ராகவேந்திரர் மேல் பல பாடல்களைப் பாடியுள்ளார். இதுவும் ஒரு புகழ் பெற்ற பாடலே.



***

ரோக ஹரனே க்ருபா சாகர ஸ்ரீகுரு
ராகவேந்திரா பரிபாலிஸோ (ரோக)

நோய்களைத் தீர்ப்பவனே, கருணைக் கடலே,
ஸ்ரீ ராகவேந்திரனே, எனக்கு வழிகாட்டு (காப்பாற்று / ஆட்கொள்வாயாக) (ரோக)

சந்தத துர்மத த்வாந்த திவாகர
சந்த வினுத மாத லாலிஸோ (ரோக)

தடையில்லாமலும் எந்த பாரபட்சம் இல்லாமலும் (அனைவருக்கும் கிடைக்கும்) சூரிய ஒளியைப் போன்றவனே
அனைத்து திசைகளிலும் ஆனந்தத்தை பரப்பும் நல்ல சொற்களையே (எங்களைப்) பேசச் செய் (ரோக)

பாவன காத்ர சுதேவ வரனே தவ
சேவக ஜனரொளகாடிஸோ (ரோக)

தூய்மையான உடலைக் கொண்டவனே, கடவுளர்களே வணங்கத் தக்கவனே
உன் சேவகர்களாகிய (தாசர்களாகிய) எங்களை ஆட்கொள்வாயாக (ரோக)

கன்ன மஹிம ஜகன்னாத விட்டல ப்ரிய
நின்ன ஆராதனே மாடிஸோ (ரோக)

(அனைத்திலும்) ஆழ்ந்த அறிவுடைய, மகிமை பொருந்தியவனே, (இந்த) ஜகன்னாத விட்டலனின் தாசனை,
உன்னை எப்போதும் பூஜிக்கச் செய்வாயாக (ரோக)

***

இந்தப் பாடலை மிகவும் அற்புதமாக, மனமுருகி பாடியிருக்கும் வித்யாபூஷணர்.



***

Roga Harane by Jagannatha Dasar.



No comments: