Sunday, January 25, 2015

வந்தாள் மகாலட்சுமியே!

வந்தாள் மகாலட்சுமியே!

தாசரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘பாக்யதா லக்‌ஷ்மி பாரம்மா’ கேட்டிருப்பீர்கள். இங்கே ஏற்கனவே பார்த்திருக்கிறோம். வரலட்சுமி பூஜையின்போதும், வெள்ளிக்கிழமை பூஜைகளின் போதும் இந்தப் பாடலைப் பாடுவார்கள். மகாலட்சுமியை வீட்டுக்குள் வா என்று கூப்பிட்டு, ஆரத்தி எடுத்து, பூஜை செய்வார்கள். வீட்டுக்குள் வந்த மகாலட்சுமியைப் புகழ்ந்து பாடுவதைப் போல அமைந்த பாடல் இது.

அந்தப் பாடலில் உள்ள அதே போன்ற சொற்கள், சின்னச்சின்ன எளிமையான வரிகள் என்று பூஜைகளில் பாடுவதற்கு மிகவும் ஏற்ற பாடல்.



***

பந்தாளு நம்ம மனெகே 
ஸ்ரீ மகாலட்சுமி சந்தேவில்லதந்தே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே நம் வீட்டிற்கு
ஒரு தயக்கமும் இல்லாமல் (பந்தாளு)

பந்தாளு நம்ம மனெகே
நிந்தாளு க்ருஹதல்லி
நந்த கந்தன ராணி
இந்திரெ நம்ம மனெகே (பந்தாளு)

வந்தாள் மகாலட்சுமியே
நின்றாளே நம் வீட்டில்
கோபாலகிருஷ்ணனின் மனைவி
வந்தாளே இந்திரா, நம் வீட்டிற்கு (பந்தாளு)

ஹெஜ்ஜெ மேலே ஹெஜ்ஜெய நிக்குதா
கெஜ்ஜெய கால கலுகலுகலு என்னுதா
மூர்ஜகவ மோஹிசுத்த முகுந்தன ராணியு
சம்பத்து கொடலிக்கே வேங்கடேசன சஹித (பந்தாளு)

அடி மேல் அடி எடுத்து வைத்து
கொலுசு மாட்டிய காலினால் சத்தத்தை ஏற்படுத்தியவாறு
மூவுலகும் பூஜிக்கும் முகுந்தனின் மனைவியனவள்
செல்வத்தைக் கொடுப்பதற்காக வேங்கடவன் உடன் (வந்தாள்)

மாச ஸ்ராவண சுக்லவு சுக்ரவார
பௌர்ணமி தினதந்து
பூசுரரெல்ல கூடி சாசிர நாமவ பாடி
வாசவாகிரலிக்கெ வாசுதேவன ராணி (பந்தாளு)

ஆவணி மாத வெள்ளிக்கிழமை
பௌர்ணமி தினத்தில்
(அவளின்) 1000 நாமங்களைப் பாடி, போற்றி பூஜை செய்யும் மக்களின் வீட்டில்
வசிப்பதற்கு, வாசுதேவனின் மனைவி (வந்தாள்)

கனகவாயிது மந்திர ஜனனி பரலு
ஜய ஜய ஜய என்னிரே
சனகாதி முனிகள சேவெயனு ஸ்வீகரிசி
கனகவல்லியு தன்ன காந்தன கரெதுகொண்டு (பந்தாளு)

அவள் வந்ததும் இல்லமே தூய்மை/பிரகாசமானது
வாழ்க வாழ்க வாழ்க என்று சொல்லுங்கள்
சனகாதி முனிவர்கள் அனைவரின் பூஜையையும் ஏற்றுக்கொண்டு
கனகவல்லி ஆனவள் தன் கணவனையும் அழைத்துக் கொண்டு (வந்தாள்)

உட்ட பீதாம்பர ஹொளெயுதா
கரதல்லி கட்டி கங்கண ஹிடியுதா
ஸ்ருஷ்டிகொடெய நம்ம புரந்தரவிட்டலன
பட்டதரசி நமகே இஷ்டார்த்த கொடலிக்கே (பந்தாளு)

பளிச்சென்று இருக்கும் ஆடையுடன்
கையில் கங்கணத்துடன்
இவ்வுலகைப் படைத்துக் காக்கும் நம் புரந்தரவிட்டலனின்
இல்லத்தரசி, நமக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பதற்கு (வந்தாள்)

***


No comments: