Thursday, March 6, 2014

பயப்படாதீங்க.. பயப்படாதீங்க...



த்வைத மார்க்கத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியர் முந்தைய அவதாரங்களில் ஹனுமன் மற்றும் பீமனாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஹனும, பீம, மத்வ என்ற இந்த வரிசையை புரந்தரதாசர் மற்றும் பிற தாசர்கள் தங்கள் பாடல்களில் பாடியிருக்கின்றனர். இன்றைய பாடலிலும் இம்மூவரையும் நம்பியவருக்கு இவ்வுலகில் எதைப்பற்றிய பயமும் தேவையில்லை என்கிறார் தாசர். மிகவும் எளிமையான, சிறிய பாட்டு. தாசர் பாடல் போட்டிகளில் யாராவது சிறுவர்கள் கண்டிப்பாக பாடும் பாட்டு ஆகும்.

***

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே
பயவு இன்யாதகய்யா
சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு
பயமும் எதுக்கய்யா
ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

கனசல்லி மனசல்லி களவளவாதரெ
ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)
ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித
பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த
பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ
குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்
குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

***

http://www.youtube.com/watch?v=5SFeaJgfTow

***

2 comments:

maithriim said...

மனக் கிலேசத்துடன் இருக்கும் எனக்கு தாசரே பயப்படாதே என்று சொல்வது போல இந்தப் பாடலை இன்று பதிவில் இட்டிருக்கிறீர்கள்,நன்றி.

amas32

Guru Prasad Pandurengan said...

Excellent Sir!