Monday, March 24, 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே...



புரந்தரதாசரின் வாழ்க்கை வரலாறு 

மேற்கண்ட பதிவில், தாசரின் கதையை படித்துவிட்டு வரவும். முதலில் கருமியாக இருந்த தாசர், எப்படி பல்வேறு தத்துவார்த்த விசாரங்கள், வேத சாரங்கள், பகவானின் அவதாரங்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பாடல்கள் இயற்றலானார்? அந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம்தான் அதற்கு காரணம். அந்த சம்பவமும் அதே பதிவில் உள்ளது.

தன் பக்தையை கருமியான கணவனிடமிருந்து காப்பாற்ற இன்னொரு மூக்குத்தியைக் கொடுத்த கருணை வடிவானவனைப் போற்றிப் பாட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தாசர். சம்சார சாகரத்தில் மூழ்கியிருந்த அவர், உடனடியாக தம்புரா, கைத்தடி, பிச்சை எடுப்பதற்கு ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் முதன்முதலாக இயற்றிய பாடல் என்று இந்தப் பாடலையே குறிப்பிடுகிறார்கள். தன் இந்த மாற்றத்திற்குக் காரணமான மனைவியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம
ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

நடந்தவையெல்லாம் நல்லதாகவே ஆயிற்று நம்
ஸ்ரீதரனின் சேவையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே பெட்டா ஹிடியுவுதக்கே
மண்டே பாகி நாசுதலித்தே
ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி
தண்டிகே பெட்டா ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

தம்புரா & கைத்தடி (இந்த இரண்டையும்) பிடிப்பதற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டேன்
என் மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
தம்புரா & கைத்தடியை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடியுவுதக்கே
பூபதி எந்து கர்விசுதித்தே
ஆ பத்னீ குல சாவிரவாகலி
கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சைத் தட்டு பிடிப்பதற்கு
(நான் ஒரு) பணக்காரன் என்று எண்ணி கர்வத்தோடு இருந்தேன்
அந்த (என்) மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
பிட்சைத் தட்டை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

துளசிமாலே ஹாகுவதக்கே
அரசனெந்து திருகுதலித்தே
சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு
துளசிமாலே ஹாகிதனய்யா (ஆதத்தெல்லா)

துளசிமாலையை அணிந்துகொள்வதற்கு
(நான் ஒரு) அரசன் என்று நினைத்து திரிந்து கொண்டிருந்தேன்
அந்த தாமரைக் கண்ணனான புரந்தரவிட்டலன்
(என் கழுத்தில்) துளசிமாலையை அணிவித்தானே (ஆதத்தெல்லா)

***

இந்தப் பாடலைப் பாடும் திருமதி அருணா சாய்ராம்:

http://www.youtube.com/watch?v=0gFu8hdVQeA

தாசரைப் பற்றிய திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பாடிய திரு பாலமுரளிகிருஷ்ணா:

http://www.youtube.com/watch?v=pumAat4mk98

***

1 comment:

maithriim said...

படிக்கும்போதே புல்லரிக்கிறது. என்ன அருமையான ஒரு பாடல். தந்தமைக்கு நன்றி.

amas32