Saturday, March 1, 2014

அறிவுரை: கருமியாக இருக்காதீர்கள்...


தங்கள் செல்வத்தை தானும் அனுபவிக்காமல், வேண்டியவர்களுக்கும் கொடுக்காமல் கருமியாக இருப்பவர்களைப் பார்த்து தாசர் பாடும் பாடல் இது. பணத்தை வீட்டினுள் பதுக்கிவிட்டு, சரியாக வயிறார சாப்பிடவும் செய்யாமல், கருமியாக இருப்பவர்களே, உதவி வேண்டும் உறவினர்களுக்கு எதுவும் செய்யாமல் சாக்கு சொல்லி அனுப்பிவிடுகிறீர்களே, எமன் வந்து கூப்பிடும்போது, இது எதுவும் கூட வராது - அப்போது உங்களுக்கு இருக்கும் ஒரே உறவினன் நம் புரந்தரவிட்டலன்தான் என்று சொல்கிறார்.

***

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா
ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை
ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு
மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி
ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா
ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு
(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே
(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்
உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே
குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி
ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக
புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்
(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே
நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது
நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு
குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி
கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக
நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது
சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே
யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது
உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

***

பாடலை அனுபவித்து பாடியுள்ள வித்யாபூஷணர்:

http://www.youtube.com/watch?v=1VSuctLiyQc

***

No comments: