Wednesday, February 5, 2014

நீ நிஜமாகவே கருணையுள்ளவன்தானா?


பற்பல பாடல்களில் சொல்லப்பட்ட அதே கருத்துகள்தான். சர்வோத்தமனிடம் தாசர் என்ன வேண்டுவார்? இம்மையில் எப்பொழுதும் நின் கருணை; மறுமை வேண்டாம். இவ்வளவுதான். இதை ‘வைராக்கிய’ வகைப் பாடல் என்பார்கள். இந்த வகையில் புரந்தரதாசர், கனகதாசர் முதலானோர் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இதில் பரந்தாமனை திட்டிப் பாடுவது இன்னொரு வகை. அதை ‘நிந்தா ஸ்துதி’ என்பர். இந்த பாடல் இவ்விரு வகையிலும் வருமாறு உள்ளது.

முன்னர் இறைவன் பல அவதாரங்களில் தன் பக்தர்களை எப்படி காப்பாற்றினான், என்னை ஏன் இந்தப் பிறவியில் இன்னும் விட்டிருக்கிறாய்? நீ கருணையுள்ளவன்தானா என்று எனக்கு நம்பிக்கை போய்விடும் போலிருக்கிறதே என்றெல்லாம் புரந்தரதாசர் பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை பார்ப்போம்.

***

கருணாகர நீனெம்புவது யாதகோ
பரவச வில்ல எனகே
பரி பரியலி நர ஜெம்னவனித்து
திருகி திருகி மன கரகிசுவத கண்டு (கருணாகர)

கருணாகரன் என்று உன்னை சொல்வது எதற்காக?
(நீ கருணாகரன் என்ற) நம்பிக்கையில்லை எனக்கு
மறுபடி மறுபடி எனக்கு மானிட ஜென்மத்தைத் தந்து
திரும்பத் திரும்ப என் மனம் கஷ்டப்படுவதைக் காணும் உன்னை (கருணாகர)

கரி த்ருவ பலி பாஞ்சாலி அஹல்யெயா
பொரெதெவா நீனந்தே
அரிது விசாரிசி நோடல தெல்லவு
பரி பரி கந்தேகளெந்தே (கருணாகர)

யானை (கஜேந்திரன்), துருவன், பலி மகாராஜா, பாஞ்சாலி, அகல்யை
(ஆகிய எல்லாரையும்) காப்பாற்றியவன் நீயே என்கிறார்கள்
தானாகவும், கேட்டு தெரிந்துகொண்ட இது (மேற்கண்ட) எல்லாமும்
மறுபடி மறுபடி (கற்பனைக்) கதைகளாகவே தோன்றுகிறதே? (கருணாகர)

கருணாகர நீனாதரே ஈகலே
கரபிடிதென்னனு ஹரி காயோ
சரசிஜாக்‌ஷனே அரச நீனாதரே
துரிதகளென்னனு பீடிபதுண்டே? (கருணாகர)

நீ கருணையுள்ளனவன் என்றால் இப்போதே
என் கைகளைப் பிடித்து என்னை காப்பாயாக ஹரியே
தாமரைக் கண்ணனே, நீ (அனைவருக்கும்) அரசன் என்றால்
கஷ்டங்கள் என்னை பீடிப்பது ஏன்? (கருணாகர)

மரண காலதல்லி அஜாமிள கொலிதே
கருடத்வஜனெம்ப நாமதிந்தா
வரபிருதுகளு உளிய பேகாதரே
த்வரிததி காயோ, புரந்தர விட்டலா (கருணாகர)

மரணத் தருவாயில் (இருந்த) அஜாமிளனுக்கு கருணை காட்டினாய்
கருடத்வஜன் (வாகனம்) என்ற பெயரால் அழைக்கப்படுபவனே
(உனக்கு இருக்கும்) நல்ல பெயர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால்
உடனடியாக என்னைக் காப்பாற்றுவாய், புரந்தர விட்டலனே (கருணாகர)

***

பீமண்ணர் பாடிய இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=uwF3g_A2EJ4

வித்யாபூஷணர் பாடியதை இங்கே கேட்கலாம்.

No comments: