Monday, February 3, 2014

ஸ்ரீமஹாலக்‌ஷ்மி யாரை திருமணம் செய்து கொள்வார்?


பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். பாற்கடலை கடைய கடைய, அதிலிருந்து முதலாவதாக வந்தவர் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி. இவர் ஸ்ரீமன் நாராயணனுக்கே உரியவர் ஆகையால், உடனே அவரிடம் போய்த் தஞ்சமானார்.

இந்த இடத்தில், ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி தோன்றியவுடன், புரந்தர தாசர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்பது போல் இந்தப் பாடல் உள்ளது. அதாவது, நீ யாரைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்? என தாசர் கேட்பதாக உள்ளது. பல தலங்களில் இருக்கும் பரந்தாமனை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடலை பார்ப்போம்.

***

க்‌ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரிகே வதுவாகுவே - நீனு யாரிகே வதுவாகுவே

பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி
யாரை திருமணம் செய்துகொள்வாய் - நீயே..

சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ
பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ
சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ
உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)

(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா
பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா
நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா
காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)

செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ
கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ
இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ
நலினாக்‌ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)

அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா
உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா
அல்லது பாண்டுரங்க விட்டலனையா
தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)

மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ
சுலப தேவரு புருஷோத்தமனிகோ
பலதாயக நித்ய மங்கள தாயககோ
செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)

மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா
யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா
வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா
வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)

வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ
ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ
சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ
சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)

இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா
அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா
நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா
ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)

சரணாகத ரக்‌ஷக சாரங்கபாணிகோ
வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ
குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ
ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)

சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா
வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா
’குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா
நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)

***

திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய இந்த பாடலின் ஒலித்துண்டை கீழ்க்கண்ட தளத்தில் ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழவும்.


2 comments:

maithriim said...

ஆஹா! நன்றி.

amas32

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடலுக்கு நன்றி...