Thursday, February 13, 2014

சொல்வன்மை அல்லது நாக்கை அடக்குதல்



ஐம்புலன்களை அடக்குதல் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றை கட்டுப்படுத்தி, வென்றிட வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்று பல சான்றோர்கள் கூறியுள்ளனர். தாசரும் இந்தப் பாடலில் ஐம்புலன்களில் ஒன்றான நாக்கை கட்டுப்படுத்தி எப்பொழுதும் அந்த நாராயணனின் பெயரையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார்.

அடுத்தவரை திட்டக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, காலையில் எழுந்தவுடன் ஸ்ரீராமனின் பெயரைச் சொல்ல வேண்டும் என்று வரிசையாக தாசர் நாக்கிற்கு புத்திமதி சொல்வதைக் கேட்டு ரசிக்கவும்.

***

ஆச்சாரவில்லத நாலிகே 
நின்ன நீச புத்திய பிடு நாலிகே
விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே
சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே
உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே
(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக
வெளியில் வருகிறாயே நாக்கே

ப்ராத: காலதொள் எத்து நாலிகே
ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே
பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன
சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே
ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே
அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)
எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

சாடி ஹேளலு பேடா நாலிகே
நின்ன பேடிகொம்பேனு நாலிகே
ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ
பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே
உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே
இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை
பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே
நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே
வரத புரந்தர விட்டலராயன
சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே
நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே
வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்
பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

***

எஸ்.ஜானகி அவர்கள் பாடியது : (ஒரு திரைப்படத்தில் வந்த வெர்ஷன்):

http://www.youtube.com/watch?v=Qx84mzkYMuM

வித்யாபூஷணர் பாடியது:
(இதைக் கேட்பதற்கு RealPlayer தேவைப்படும்).

http://www.kannadaaudio.com/Songs/Devotional/home/HaridasaNamana.php

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

RealPlayer உள்ளது... நன்றி...

maithriim said...

very nice as always :-)என்ன ஒரு உன்னதமான அதே சமயம் எளிமையானக் கருத்து!

amas32