Monday, March 4, 2013

இறைவனின் திருவடிக்காக எதையெல்லாம் இழக்க முடியும்?

கனகதாசர். இவரது வரலாற்றை ஏற்கனவே இந்த பதிவில் பார்த்துட்டோம். அதில் இருக்கும் கமெண்ட்ஸ்களையும் பார்த்துடுங்க. அருமையான தகவல்கள் அங்கு இருக்கின்றன.

கனகதாசருடைய பெரும்பாலான பாடல்களில் வைராக்கியம் நிரம்பியிருக்கும். அதாவது, மனைவி, மக்கள், ஊர், உலகம் அனைத்தையும் விட்டுடறேன் - எனக்கு நீதான் வேண்டும். உன் திருவடிகளே போதும். வேறு எதையும் நாம் விரும்ப மாட்டேன். எதுவுமே எனக்கு வேண்டாம். இப்படி.

இன்றைய பாடலும் அப்படியே. இறைவா, உன் திருவடிகளுக்காக, அவற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக, நான் எதையும் விடத் தயாராக இருக்கிறேன்னு அவர் சொல்ற பட்டியலைப் பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது. இவ்வளவையும் சொல்றவர் அடக்கத்துடன் ‘இவற்றை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. நிஜமாவே (அனுபவத்திலும்) சொல்றேன். உன்னை விட்டு என்னால் ஒரு நொடியும் இருக்கவே முடியாது என்று பாடுகிறார்.

இதில் (பட்டியலில்) இருக்கும் எதுவும் என்னால் முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீங்க பாத்துட்டு சொல்லுங்க.

***

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணவ
பரிதே மாதேகின்னு அரிது பேளுவேனய்யா (தொரெது)

உன் காலடியை விட்டு (யாராலும்) சந்தோஷமாய் வாழமுடியுமா (முடியாது)
தற்பெருமைக்காக சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன் ஐயா (தொரெது)

தாயி தந்தெயா பிட்டு தபவு மாடலு பஹுது
தாயாதி பந்துகள பிடலு பஹுது
ராய முனிதரே ராஜ்யவ பிடபஹுது
காயஜாபித நின்ன அடிய பிடலாகது (தொரெது)

தந்தை தாயை விட்டுப் போய் தவம் செய்யவும் முடியும்
தாயாதி (பங்காளிகள்) உறவினர்களை உதறவும் முடியும்
அரசன் (நம் மேல்) கோபப்பட்டால், ஊரை விட்டுப் போய்விடவும் முடியும்
என்னை இந்தப் பிறப்பை அளித்தவனே, உன் அடியை விடவே முடியாது (தொரெது)

ஒடலு ஹசிதரே அன்னவ பிடபஹுது
படெத க்‌ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது
மடதி மக்கள கடெகே தொளகிஸி பிடபஹுது
கடலொடெய நிம்மடியா களிகே பிடலாகது (தொரெது)

பசித்த வயிறாயினும் உணவை விட்டு (பட்டினியாக) இருக்க முடியும்
இருக்கும் இடத்தை விட்டு கிளம்பவும் முடியும்
மனைவி மக்களை (குடும்பத்தை) விட்டு போகவும் முடியும்
பாற்கடலில் இருப்பவரே, உன் அடியை ஒரு நொடியும் விடமுடியாது (தொரெது)

பிராணவா பரரிகே பேடிதரே கொடபஹுது
மானாபிமானவ தக்கிச பஹுது
ப்ராணதாயகனாத ஆதிகேசவராய
ஜான ஸ்ரீ கிருஷ்ணா நின்னடிய பிடலாகது (தொரெது)

யாராவது (என்) உயிரைக் கேட்டாலும் கொடுக்க முடியும்
(என்) கௌரவம் / சுயமரியாதையை குறைத்துக் கொள்ளவும் முடியும்
எனக்கு உயிரைக் கொடுத்த ஆதிகேசவனே
தலைசிறந்தவனே, கிருஷ்ணனே, உன் அடியை விடவேமுடியாது (தொரெது)

***
***



***

041/365

***

No comments: