Friday, June 17, 2011

கோவிந்தனை கண்டேன்


ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!


தருமரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் பீஷ்மர், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளும் முன்னர், இந்த ஸ்லோகத்தை சொல்கிறார்.

உலகத்துக்கெல்லாம் தலைவன், தேவர்களுக்கெல்லாம் தேவன், ஆயிரம் நாமங்கள் கொண்டவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவன் பெயரை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

இதற்கு பிறகே, விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று ஆரம்பிக்கிறார்.

ஸ்லோகத்தில் பகவானின் பெயர்கள் தொடர்ச்சியா வருவது சரி. அதே மாதிரி பாட்டு இயற்ற முடியுமா? புரந்தரதாசரால் முடியும். அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.

தன வாழ்நாள் முழுக்க ஸ்ரீமன் நாராயணனின் புகழைப் பாடியே ; அவன் நாமங்களை சொல்லியே மகிழும் தாசரின் முன்னால் அந்த இறைவன் வந்தால், தாசர் என்ன கேட்பார்?

ஒன்றுமே கேட்க மாட்டார்.

மறுபடி அந்த நாராயணனின் பெயரைச் சொல்லியவாறே பாட ஆரம்பிப்பார். அப்படி அவர் பாடிய பாடல்தான் இது.

***

கண்டேன கோவிந்தன
புண்டரிகாக்ஷ பாண்டவ பக்ஷ கிருஷ்ணன (கண்டேன)


கோவிந்தனை கண்டேன்
புண்டரீகாக்ஷனை ; பாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணனை (கண்டேன)

கேசவ நாராயண ஸ்ரீ கிருஷ்ணன
வாசுதேவ அச்சுதா அனந்தன
சாசிர நாமத ஸ்ரீ ரிஷிகேஷன
சேஷ சயன நம்ம வசுதேவ சுதன (கண்டேன)


கேசவனை நாராயணனை ஸ்ரீ கிருஷ்ணனை
வாசுதேவனை அச்சுதனை அனந்தனை
ஆயிரம் நாமங்கள் கொண்ட ஸ்ரீ ரிஷிகேசனை
சேஷன் மேல் சயனித்திருக்கும் நம்ம வசுதேவரின் புதல்வனை (கண்டேன)

புருஷோத்தம நரஹரி ஸ்ரீ கிருஷ்ணன
சரணாகத ஜன ரக்ஷகன
கருணாகர நம்ம புரந்தர விட்டலன
நேரே நம்பிதேனோ பேலூர சன்னிகனா (கண்டேன)


புருஷோத்தமனை நரஹரியை ஸ்ரீ கிருஷ்ணனை
சரணாகதி செய்யும் பக்தர்களை காப்பவனை
கருணாகரனை; நம்ம புரந்தர விட்டலனை
உன்னையே நம்பியிருக்கிறேன்; பேலூரில் சென்னகேசவனாய் இருப்பவனை (கண்டேன)

***

இந்த அழகான பாடலை பாடும் ஸ்ரீ வித்யாபூஷணர்.




***

No comments: