Monday, May 16, 2011

வெங்கி பாலாஜியின் குலதெய்வம் யாரு?

பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான் இந்த பதிவின் ஹீரோ - ஸ்ரீ நரசிம்மர்.



அட ஆமாங்க.

ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார். அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

***

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.


ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.

மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.

***

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஹரிதாஸர்கள் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீ புரந்தரதாஸரால் பாடப்பட்ட ‘சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே’. அதை இன்று பார்ப்போம்.

***

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே


சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே


ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)

தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)


ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)


பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)

ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)


வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)

***

முழுப்பாடலின் ஒலி/ஒளித்துண்டு எங்கேயும் கிடைக்கலை. நானே பாடி போடலாம்னா, இதை படிக்கிற ஒரு நாலைஞ்சு பேரையும் எதுக்கு பயமுறுத்தணும்னு அதையும் செய்யலை. அதனால், கிடைத்தது மட்டும் இங்கே. இந்த பாட்டுக்கு வேறெதாவது சுட்டி இருந்தா சொல்லுங்க.

விசாகா ஹரி:



சேலம் ஸ்ரீராம்:



***

ஸ்ரீநரசிம்ம ஜயந்தியான இந்த நல்ல நாளில் (5/16/2011) அந்த ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

***

3 comments:

Giri Ramasubramanian said...

நன்னாளில் நல்ல பதிவு. நன்றி!

சின்னப் பையன் said...

மிக்க நன்றி கிரி.

MurPriya said...

Wonderful :)