Thursday, April 14, 2011

ஸ்ரீ ராகவேந்திரைக் குறித்த இன்னொரு பாடல்.

ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து ஹரிதாஸர்கள் பற்பல பாடல்கள் பாடியுள்ளனர். இன்று பார்க்கப் போகும் இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸர். கிபி1727ம் ஆண்டு அவதரித்த இவர், ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதில் பல ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்தே ஆகும். இந்த தளத்தில் ஸ்ரீ அபினவ ஜனார்த்தன தாஸரின் முதல் பாடல் இதுவாகும்.


***


ஸ்ரீ ராகவேந்திரருக்கு அறிமுகம் தேவையில்லை. துங்கபத்ரா நதிக்கரையில், மந்திராலயத்தில் சமாதி அடைந்திருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர், பற்பல பேர்களுக்கு கற்பகவிருட்சமாய், காமதேனுவாய், கேட்கும் வரங்களை தவறாது கொடுக்கும் வள்ளலாய் இருக்கிறார்.


இப்போது பாடல்.


***


துங்கா தீரதி நிந்த சுயதிவரன் யாரே பேளம்மையா

சங்கீதப்ரிய மங்கள சுகுணித ரங்க முனிபுலோத்துங்கா கணம்மா

துங்கா நதி தீரத்தில் வீற்றிருக்கும் அந்த முனி யாருன்னு சொல்லம்மா இசையைப் பிடித்தவராய், மங்களகரமாய் நல்ல குணத்துடன் இருக்கும் அந்த முனிவர் யாருன்னு சொல்லம்மா

செல்வ சுமுக பனியல்லி திலக நாமகளு பேளம்மையா

ஜலஜ மணிய கொரளலு துளசி மாலேகளு பேளம்மையா

சுலலித கமண்டல தண்டவன்ன தரிதிஹனே பேளம்மையா

குலஹிரண்யகனல்லி ஜனிசித ப்ரஹ்லாதனு தானில்லிதனம்மா (துங்கா)

அமைதி தவழும் முகத்தில், நெற்றியில் திலகம் இருக்கும் கலகலக்கும் மணிகளையுடைய துளசி மாலைகள் கழுத்தில் இருக்கும் கைகளில் கமண்டலமும், தண்டமும் ஏற்றிருப்பார் ஹிரண்யாசுரனின் குலத்தில் உதித்த பிரகலாதனின் அவதாரமே இவர் (துங்கா)

சுந்தரசரணரவிந்த சுபகுதியலிந்தா பேளம்மையா

வந்திஸி ஸ்துதிசுவ பூசுரரூ பலுவிருந்தா பேளம்மையா

ஜண்ட தளங்க்ரிதியிந்த ஷோபிசுவ ஆனந்தா பேளம்மையா

ஹிந்தே வியாசமுனியெந்தெணிசித கர்மந்திகளரசனதிந்த ரஹிதனே (துங்கா)

அவருடைய அழகான பாதங்களில் மிகவும் பக்தியுடன் வணங்கி, போற்றி, பாடும் மக்கள் அனைவருக்கும் எண்ணிக்கையிலடங்கா ஆனந்தத்தைத் தரும் இவர் முன்னர் வியாச பகவானாய் அவதரித்தவரே, என்று சொல்லம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலன தியானிசுவ பேளம்மையா

அபிவந்திபரிகே அகிலார்த்தவ சல்லிசுவ பேளம்மையா

நபமணி யந்ததி பூமியல்லிராஜிசுவ பேளம்மையா

சுபகுண நிதி ஸ்ரீ ராகவேந்திரயதி அபுஜபவண்டதல்லி ப்ரபலகணம்மா (துங்கா)

அபினவ ஜனார்த்தன விட்டலனை தியானிப்பவர்களுக்கு பூஜிப்பவர்களுக்கு உலகத்தில் இருக்கும் சந்தோஷங்கள் அனைத்தும் கிடைக்கும் இந்த பூமியை ஆளும் நற்குணங்களையுடைய ஸ்ரீ ராகவேந்திரர், உலகம் முழுக்க பிரபலமானவரென்று சொல்லம்மா (துங்கா)

***

இந்த பாடலை ஆழ்ந்த பக்தியுடன் பாடும் நம்ம பீமண்ணர்.

***

1 comment:

குமரன் (Kumaran) said...

குருராஜர் மேல் இருக்கும் இந்த பாடலை பீமசேனர் பாடிக் கேட்க அருமையாக இருக்கிறது!